3 முருங்கைக் காய்
2 உருளைக் கிழங்கு
1 பெரிய வெங்காயம்
3 கப் தண்ணீர்
1 கப் பால் (தேங்காய்ப் பால் அல்லது சோயாப் பாட் அல்லது ஆடை நீக்கிய பால்)
2 உள்ளிப் பல்லு
1 தே.கரண்டி வெந்தயம்
1 மே.கரண்டி மிளகாய்த் தூள்( கறித் தூளும் மிளகாய்த் தூளும் சேர்ந்தது)
1 மே.கரண்டி நல்லெண்ணை
புளி் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
முருங்கைக் காய்களை சுட்டி விரல் அளவில் வெட்டிப் பின் அவற்றைப் பாதிகளாக வெட்டவும். உருளைக் கிழங்குகளையும் சிறு துண்டுகளாக வெட்டி முருங்கைக் காயுடன் போடவும்.
அடுப்பில் சட்டியை வைத்து, அதில் நல்லெண்ணையை விட்டு வெட்டிய வெங்காயம், உள்ளி , வெந்தயம் என்பவற்றை போட்டு தாளிக்கவும். பின் தண்ணீர், வெட்டிய முருங்கைக் காய், உருளைக் கிழங்கு, உப்பு, மிளகாய்த் தூள் என்பவற்றைக் கொட்டி, மூடி 7-10 நிமிடம் வரை அவிக்கவும்.அவிந்ததா என கைவிரல்களால் மசித்துப் பார்க்கவும். அவிந்த பின்னர் பால் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
இறுதியாக புளியைக் கரைத்து விட்டு கலக்கி, ஒரு நிமிடம் கொதித்தபின்
இறக்கி ஆறவிடவும்.
இந்த அவியல் குழம்பை சோறு, பிட்டு, இடியப்பம், இட்டலி, உப்புமா என்பவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்


