முருங்கைக் காய் அவியல் குழம்பு எப்படிச் சமைப்பது?

தேவையான பொருட்கள்
3 முருங்கைக் காய்
2 உருளைக் கிழங்கு
1 பெரிய வெங்காயம்
3 கப் தண்ணீர்
1 கப் பால் (தேங்காய்ப் பால் அல்லது சோயாப் பாட் அல்லது ஆடை நீக்கிய பால்)
2 உள்ளிப் பல்லு
1 தே.கரண்டி வெந்தயம்
1 மே.கரண்டி மிளகாய்த் தூள்( கறித் தூளும் மிளகாய்த் தூளும் சேர்ந்தது)
1 மே.கரண்டி நல்லெண்ணை
புளி் தேவையான அளவு
உப்பு தேவையான அளவுசெய்முறை

முருங்கைக் காய்களை சுட்டி விரல் அளவில் வெட்டிப் பின் அவற்றைப் பாதிகளாக வெட்டவும். உருளைக் கிழங்குகளையும் சிறு துண்டுகளாக வெட்டி முருங்கைக் காயுடன் போடவும்.
அடுப்பில் சட்டியை வைத்து, அதில் நல்லெண்ணையை விட்டு வெட்டிய வெங்காயம், உள்ளி , வெந்தயம் என்பவற்றை போட்டு தாளிக்கவும். பின் தண்ணீர், வெட்டிய
முருங்கைக் காய், உருளைக் கிழங்கு, உப்பு, மிளகாய்த் தூள் என்பவற்றைக் கொட்டி, மூடி 7-10 நிமிடம் வரை அவிக்கவும்.அவிந்ததா என கைவிரல்களால் மசித்துப் பார்க்கவும். அவிந்த பின்னர் பால் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
இறுதியாக புளியைக் கரைத்து விட்டு கலக்கி, ஒரு நிமிடம் கொதித்தபின்
இறக்கி ஆறவிடவும்.

இந்த அவியல் குழம்பை சோறு, பிட்டு, இடியப்பம், இட்டலி, உப்புமா என்பவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்

.

மோதகம், கொழுக்கட்டை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
1/2 கப் சிவப்பு அரிசி மா
1 1/2 கப் வெள்ளை அரிசி மா
கொதிநீர் தேவையான அளவு


உள்ளுடல்
2 கப் பயற்றம் பருப்பு(வறுத்த)
3/4 கப் சர்க்கரை (வெல்லம்-தமிழகத்தில்)
1/2 கப் துருவிய தேங்காய்ப் பூ
தேவையான அளவு ஏலக்காய்த் தூள்(பொடி -தமிழகத்தில்)


செய்முறை
முதலில் பயற்றம் பருப்பை தண்ணீர் வற்றும்வரை மசியும் பதத்திற்கு அவித்து, ஆறவிட்ட பின் அதில் சர்க்கரை, தேங்காய்ப் பூ, ஏலக்காய்த் தூள் என்பவற்றைப் போட்டு கலந்து வைக்கவும்.இதுதான் மோதகக் கிண்ணங்களுக்குள் வைக்கப்படும் உள்ளுடல் ஆகும்.

சிவப்பு அரிசி மாவையும், வெள்ளை அரிசி மாவையும் கலந்து, அதில் நன்றாகக் கொதித்த நீரை ஊற்றிக் கிண்டவும். இடியப்பத்திற்குக் குழைப்பதுபோல இறுக்கமாக குழைத்து எடுக்கவும். பின் சிறு உருண்டைகளாக எடுத்து கிண்ணங்கள் செய்யவும்.மோதகக் கிண்ணங்களுக்குள் உள்ளுடலை அளவாக வைத்து, மோதகக் கிண்ணங்களின் மேற்பகுதியை மூடி உருண்டை வடிவாக பிடித்த பின் நீராவியில் அவித்தெடுக்கவும்.
கொழுக்கட்டை
மோதகத்திற்கு வட்டக் கிண்ணங்கள் பிடிப்பது போல கொழுக்கட்டை செய்வதற்கு நீள்வட்ட வடிவாக கிண்ணத்தைப் பிடிக்க வேண்டும்.
பின்னர் இந்தக் கிண்ணத்திற்குள் உள்ளுடலைப் போட்டுக் கரையை கட்டைவிரலாலும் சுட்டு விரலாலும் கிள்ளில் கிள்ளி மடித்து, மூடவேண்டும். இதை நீராவியில் அவித்து எடுத்தபின் கொழுக்கட்டையைப் பரிமாறலாம்.

பல்லுக் கொழுக்கட்டை
கொழுக்கட்டைக் கரைப் பகுதியை மூடும்போது பல்லு வடிவில் வெட்டிய தேங்காய்ச் சொட்டுகளைச் செருகி விட வேண்டும்.
இதை குழந்தைகளுக்கு 6 - 8 மாதங்களில் புதிதாகப் பல் முளைக்கும்போது கொழுக்கட்டையை அவித்து சுழகில் போட்டு, தாய் மாமன் (இல்லாதவர்-குழந்தையின் தந்தை)அக் குழந்தையின் தலை மேல் கொட்டுவது ஒரு முறையாக ஊரில் செய்வார்கள்.
________________________________________________________________________________________
செய்து பார்த்து, எனக்கும் பதில் சொல்லுங்கள். நன்றி. அன்புடன் செல்லி
.

மாச்சத்துக் குறைந்த (diet ) தோசை (சைவம்)

ஆரோக்கியமான(diet) தோசை அடுத்து வரும் என்று சொன்ன ஆளையே காணவில்லை என்றுதானே யோசிக்கிறீர்கள். இதோ அந்தத் தோசை எப்படிச் செய்வது என்பதைப் பாருங்கள்.


தேவையான பொருட்கள்

1 கப் தோலுள்ள உழுத்தம் பருப்பு
2 கப் ஆட்டா மா (atta flour)

1/2 கப் ரவை

தேவையான அளவு தண்ணீர்
தேவையான அளவு உப்பு

செய் முறை

உழுத்தம் பருப்பை 4 மணித்தியாலம் ஊறவிடவும். பின் அதைக் கழுவி, அரைவாசித் தோலை நீக்காமல் அரைத்தெடுக்கவும்.

ஆட்டா மாவை நீராவியில் அவித்து
, கட்டிகளை கைகளால் பிசைந்து மாவாக்கவும். அரைத்து வைத்த உழுந்துடன் மாவையும் ரவையையும் சேர்த்து உப்பும் தேவையானளவு இட்டு 6 மணித்தியாலம் புளிக்க விடவும்.

குளிர் காலங்களில் அவிணை (oven) சூடாக்கி பின் நிப்பாட்டிவிட்டு, அதற்குள் தோசைமாவை இரவுமுழுவதும் வைத்தால் புளித்துவிடும்.

பின்பு, தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுடவும்.தடிப்பான தோசையாகவும் சுடலாம்; மெல்லிய முறுகல் தோசையாகவும் சுடலாம்.

இந்தத் தோசையில் மாச்சத்து மிகவும் குறைவாகவும் , புரதச் சத்து கூடுதலாகவும் உள்ளது. இதை பருப்பும் தக்காளியும் சேர்த்துச் செய்த கறியுடன் இன்னும் கூடுதல் புரதம் கிடைக்கிறது. இந்தத் தோசையைச் சுடும்போது எதுவித எண்ணெயும் பாவிக்கக் கூடாது.

பருப்பும் தக்காளியும் சேர்ந்த கறிக்கும் எண்ணெய் பாவிக்கக் கூடாது.
பருப்பபை வேறாகச் சமைக்கவும். தக்காளியை உப்பு, தூள், இஞ்சி,புதினா இலை சேர்த்து அவித்தபின், மசிக்கவும். பின்னர் அவித்தபருப்பையும் இதனுடன் கலந்துவிடவும். மெல்லிய நெருப்பில் சூடாக்கிய பின் தோசையுடன் பரிமாறலாம்.

ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு இந்த தோசை ஒன்றும், ஒரு கப் இந்தக் கறியுமே போதும். ஆரோக்கியமான சாப்பாலாக இருக்கும்.

_____________________________________________________________________________

செய்து, சாப்பிட்டுப் பார்த்து ஒண்டிரண்டு சொற்களை இங்கை விட்டிட்டுப் போங்க.
.

செவ்வரத்தம் பூ சலட்/ சம்பல் (சைவம்)

யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது செவ்வரத்தம் பூச் சம்பல் செய்து சாப்பிடுவோம். அது மிகவும் நல்ல உருசியாக இருக்கும். அவுஸ்திரேலியாவில் எங்கே இப்படிச் செய்து சாப்பிட முடியும் என ஏக்கமாக இருந்தது. ஏனென்றால் செவ்வரத்தம் பூவிற்கு எங்கே போவது?. ஆனால், இது குயின்ஸ்லாந்து மாநிலத்தில் எப்பவுமே கிடக்கிறது. கிடைச்சா சும்மா இருக்க முடியுமா?, உடனே ஒரு சம்பல் செய்து சாப்பிட்ட பின்னர்தான் மிச்ச வேலை.
செவ்வரத்தம் பூ (
Hibiscus flower ) சத்துள்ள, மருத்துவ குணமுள்ள, சாப்பிடக் கூடிய பூ. தமிழகத்தில் இதனை செம்பருத்தி பூ என்பர். இந்தப் பூவை குளிர் பானம், சம்பல், சலட், குழம்பு என பலவகையிலும் பயன்படுத்தலாம்.

செவ்வரத்தம் பூ சலட்

தேவையான பொருட்கள்

செவ்வரத்தம் பூ 20
சிவப்பு வெங்காயம் (salad onion) 1
வெட்டிய புதினா இலை 1கப்
பச்சை மிளகாய் 1
எலுமிச்சம்பழம் பாதி
தேவையான அளவு உப்பு

செய்முறை















செவ்வரத்தம் பூவைச் சுத்தம் செய்து சின்னஞ் சிறிதாக வெட்டவும்.
சிவப்பு வெங்காயம் (salad onion) ,பச்சை மிளகாய் என்பவற்றையும் வெட்டயவுடன், வெட்டிய புதினா இலை, செவ்வரத்தம் பூவையும் உப்பையும் மரக் கரண்டியால் கலந்து வைக்கவும். சாப்பிடத் தயாரனவுடன் எலுமிச்சம்பழப் புளியையும் விட்டு கிளறிவிடவும்.

இந்த சலட் பாணுடன் "சான்விச" மாதிரி செய்து சாப்பிடலாம். ரொட்டிக்குள் வைத்து "சலட் றப்"(salad wrap) போலச் செய்தும் சாப்பிடலாம்.

சோறு, புட்டுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்
வெங்காயம் பிடிக்காதவர்கள் "சுக்கினி" (zucchini)யை துருவலாக்கிச் சேர்க்கலாம்.

சம்பல் செய்யும் முறை:

1/2 கப் தேங்காய்ப் பூவை கூட்டாக அரைத்து இந்த சலட்டுடன் சேர்த்தால் செவ்வரத்தம் பூச் சம்பல் ஆகிவிடும்.

எல்லாம் சரி, பூவுக்கு எங்க போறதுன்னு யாரோ பேசற மாதிரி கேட்கிறது.
வந்ததுதான் வந்தோம் வெளி்நாட்டுக்கு, குளி்ர்நாடுகளில இது குதிரைக் கொம்பாவல்ல இருக்குது.
இதுக்காகவாவது ஒரு தடவை குயின்ஸ்லாந்து வந்திட்டுப் போலாமே!

_செல்லி____________________________________________________________________--
சரி,சரி..உங்க பதில அப்புறமா வந்து சொல்லாம இப்பவே சொல்லிட்டுப் போங்க. நன்றி
.

இந்தப் பூவை தெரியுமா? இதில் சம்பல்/சலட் செய்யலாம்

என்ன பூ என்று சொல்லுங்கள்.

இதில் சலட்/சம்பல் எப்படிச் செய்வது என்று சொல்கிறேன்.
.

இடி சம்பல் - சைவம்




தேவையான் பொருட்கள்

செத்தல் மிளகாயைப் 8
தேங்காய்ப்பூ 2 கப்
வெங்காயம் 1/4 கப்
உப்பு, தேவையான் அளவு
கறிவேப்பிலை தேவையான் அளவு


செய்முறை

செத்தல் மிளகாயைப்யைப் பொரித்து,/வறுத்து உப்பு, வெங்காயம், தேங்காய்ப்பூ எல்லவற்றையும் சேர்த்து உரலில் இட்டு இடித்துக்கொள்ள் வேண்டும். இது கொஞ்சம் ஈரப்பற்றில்லாத்தாயிருக்கும். இச் சம்பலை யாழ்ப்பாணத்தில் பிட்டு, இடியப்பம், தோசை இவற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள்
.

கூப்பன் மாத் தோசை (சைவம்)

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

முதலில் கூப்பன் மா என்ன என்பதை விளக்குகிறேன். யாழ்ப்பாணத்தில் சங்கக் கடையில் ஒரு குடும்பத்திற்கு கூப்பனுக்கு( ration) வழங்கப்படும் கோதுமை மாவைத்தான் (plain flour)கூப்பன் மா என்று சொல்லப்படுகிறது. இந்தக் கூப்பன் மாவில் செய்யப்படும் தோசை என்பதால் "கூப்பன் மா தோசை " எனப்படுகிறது.


தேவையான பொருட்கள்

1 கப் உழுத்தம் பருப்பு
3
கப் கூப்பன் மா (plain flour)
தேவையான அளவு தண்ணீர்
தேவையான அளவு உப்பு


செய் முறை

உழுத்தம் பருப்பை 4 மணித்தியாலம் ஊறவ
ிடவும். பின் அதைக் கழுவி அரைத்தெடுக்கவும்.

மாவை நீராவியில் அவித்து
, அரிக்கனால் (சல்லடை) அரித்து, அரைத்து வைத்த உழுந்துடன் மாவையும் சேர்த்து உப்பும் தேவையான்ளவு இட்டு 6 மணித்தியாலம் (வெப்ப காலங்களில் புளிக்கவிடவும்.குளிர் காலங்களில் அவிணை (oven) சூடாக்கி பின் நிப்பாட்டிவிட்டு, அதற்குள் தோசைமாவை இரவுமுழுவதும் வைத்தால் புளித்துவிடும்.






பின்பு
, தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுடவும்.தடிப்பான தோசையாகவும் சுடலாம்; மெல்லிய முறுகல் தோசையாகவும் சுடலாம்.

__________________________________________________________________-
செய்து பார்த்து கருத்தைச் சொல்லுங்கள்.

.